Popular Posts

Friday, 12 June 2026

தஞ்சையிலும் எதிரொலித்த தொடர் மின்வெட்டு பிரச்சினை - குடிநீர் பிரச்சினையால் சாலை மறியல்

தமிழ்நாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் திரு ச.ஜோசப்விஜய் அவர்கள் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதில் இருந்து மாநிலம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் தொடர் மின்வெட்டு மற்றும் குறைந்த மின்னழுத்த மின்சார பிரச்சினைகள் ஆங்காங்கே தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.



இந்நிலையில், தொடர் மின் தடை மற்றும் குறைந்த மின் அழுத்தத்தால் அவதிப்பட்டு வந்த ராமாபுரம், வயலூர் கிராம மக்கள், இன்று காலிக் குடங்களுடன் தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் அதிரடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அடிக்கடி ஏற்படும் மின்தடை மற்றும் குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின் மோட்டாரை இயக்க முடியாமல் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், வீட்டு உபயோக மின் சாதனப்பொருட்கள் அடிக்கடி பழுதாகின்றன என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், மின் வாரியத்தினர் மற்றும் காவல்துறை சமரச பேச்சுவார்த்தைக்குப் பின்னர் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் விசாரித்த போது மின் பற்றாக்குறை மற்றும் கோடைக்காலங்களில் மின் கடத்தலின் போது இயல்பாக ஏற்படும் மின் இழப்பு மற்றும் அதிகப்படியான மின் பயன்பாடு காரணமாக அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது என்றும், ஆட்கள் பற்றாக்குறை காரணமாக உடனுக்குடன் சரி செய்ய சிரமமாக உள்ளது எனவும், இருப்பினும் மின்வாரிய அலுவலர்கள் தொடர்ந்து மின்சார விநியோகத்தை சீரமைத்து வருகின்றனர் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment

தஞ்சையிலும் எதிரொலித்த தொடர் மின்வெட்டு பிரச்சினை - குடிநீர் பிரச்சினையால் சாலை மறியல்

தமிழ்நாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் திரு ச.ஜோசப்விஜய் அவர்கள் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதில் இருந்து மாநிலம் முழுவதும் பெரும்பாலான இ...